Saturday, January 16, 2021

குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது*.

*சிந்தனை கதை*..

*காலத்திற்கும் உதவி*

*சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்*.

*அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார்*. அவனை அசைத்துப் பார்த்தார். அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.

*மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்*.

*குதிரை மீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது*. 

திகைத்துப் போனார் சாது. அப்போது தான் *அவன் ஒரு திருடன் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது* அவருக்கு. குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர், *சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார்*

அங்கே *குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்*. சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார். திரும்பிப் பார்த்த *திருடன் பேயறைந்தது போல் நின்றான்*. சாது மெல்லச் சிரித்தார்.

*சொல்லாதே* " என்றார்.

*திருடன் மிரண்டான்*.

"எது? என்ன?" என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.

*சாது சொன்னார்* ...

."குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், நீ அதை அடைந்த விதத்தை *யாரிடத்திலும் சொல்லாதே*.

மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிய வந்தால் *எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால் கூட உதவ முன் வரமாட்டார்கள்*.

நான் இந்த குதிரையை இழந்ததால், எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலை படவில்லை. காரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும்.

*தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய, நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போககூடும்*. 

புரிகிறதா?"...

*திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது*.

*குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது*.

*நல்லவர்களையும் நல்ல நட்பையும் இழந்து விடக்கூடாது*.

*நம்பிக்கையுடன் பயணிப்போம். நல்லவர்களை நாம் இழந்துவிடகூடாது* ...
படித்ததில் மனதைக் கவர்ந்தது! அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏
முகநூல் பகிர்வு
----- *நெய்வேலி சார்லஸ்*

No comments:

Post a Comment